×

தமிழகத்தில் தீவிரமடைந்த வடகிழக்கு பருவமழை: சிதம்பரத்தில் 17 செ.மீ மழை பதிவு

சென்னை: சிதம்பரம் அருகே சேத்தியாத் தோப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 17 செ.மீ மழை மிக கனமழை கொட்டி தீர்த்தது. இன்று காலை 6 மணி வரை கொள்ளிடம் (மயிலாடுதுறை), லால்பேட்டையில் (கடலூர்) தலா 11 செ.மீ. மழை பெய்துள்ளது.

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கினாலும் அந்த மாதத்தில் மழையின் அளவு இயல்பை காட்டிலும் குறைவாக இருந்தது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவியது.

இதன் காரணமாக தமிழ்நாட்டில் மீண்டும் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில், சிதம்பரம் அருகே சேத்தியாத் தோப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 17 செ.மீ மழை பத்திவாகியுள்ளது. இன்று காலை 6 மணி வரை கொள்ளிடம் (மயிலாடுதுறை), லால்பேட்டையில் (கடலூர்) தலா 11 செ.மீ. மழை பதிவானது.

The post தமிழகத்தில் தீவிரமடைந்த வடகிழக்கு பருவமழை: சிதம்பரத்தில் 17 செ.மீ மழை பதிவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Sethiyad Thop ,Chidambaram ,
× RELATED தமிழகத்தில் ஜூன் 6ம் தேதிக்கு பதிலாக...